Friday, August 27, 2010

A walk down the lane

Gone are the days!!!
When
The school reopened in June,
And we settled in our new desks and benches!


When we queued up in book depot,
And got our new books and notes!


When we wanted two Sundays and no Mondays ,

Yet managed to line up daily for the morning prayers.


We learnt writing with slates and pencils, and
Progressed To fountain pens and ball pens and then Micro tips!


When we began drawing with crayons and evolved to
Color pencils and finally sketch pens!


When we started calculating
first with tables and then with
Clarke's tables and advanced to
Calculators and computers!


When we chased one another in the
corridors in Intervals , and returned to the classrooms
Drenched in sweat!


When we had lunch in classrooms, corridors,
Playgrounds,
under the trees and even in cycle sheds!


When all the colors in the world ,
Decorated the campus on the Second Saturdays!


When a single P.T. period in the week's Time Table,
Was awaited more eagerly than the monsoons!


When cricket was played with writing pads as bats ,
And Neckties and socks rolled into balls!


When few played
"kabadi" and "Kho-Kho" in scorching sun,
While others simply played
"book cricket" in the Confines of classroom!


Of fights but no conspiracies,
Of Competitions but seldom jealousy!


When we used to
watch Live Cricket telecast,
In the opposite house in Intervals and Lunch breaks!


When few rushed at 3:45 to
"Conquer" window seats in our School bus!
While few others had "Big Fun", "peppermint" ,
"kulfi", " milk ice !" and "sharbat !" at 4o Clock!


Gone are the days
Of Sports Day,
and the annual School Day ,
And the one-month long
preparations for them.


Gone are the days
Of the stressful Quarterly,
Half Yearly and Annual Exams , And the most
enjoyed holidays after them!

Gone are the days
Of tenth and twelfth standards, when
We Spent almost the whole year writing revision tests!

We learnt,

We enjoyed,

We played,

We won,

We lost,

We laughed,

We cried,

We fought,

We thought.

With so much fun in them, so many friends,

So much experience, all this and more!


Gone are the days

When we used
to talk for hours with our friends!
Now we don't have time to say a 'Hi'!


Gone are the days
When we played games on the road!

Now we
Code on the road with laptop
!


Gone are the days
When we saw stars
Shining at Night!

Now we see stars when our code doesn't
Work
!


Gone are the days
When we sat to chat with Friends on grounds!
Now we chat in chat rooms
.....!


Gone are the days
Where we
studied just to pass!
Now we study to save our job!
Gone are the days


Where we had no money in our pockets and still fun filled on our hearts!!
Now we have the atm as well as credit card but with an empty heart
!!


Gone are the days
Where we shouted on the road!
Now we don't shout even at home


Gone are the days
Where we got lectures from all!
Now we give lectures to all... like the one I'm doing now
....!!


Gone are the days
But not the memories, which will be
Lingering in our hearts for ever and ever and
Ever and ever and ever.....


Gone are the Days.... But still there are lot more Days to come in our Life!!


NO MATTER HOW BUSY YOU ARE,
DONT FORGET TO
LIVE THE LIFE THAT STILL
EXISTS….

Good news to all of us .

UNESCO announces INDIAN NATIONAL ANTHEM as the
BEST National Anthem in the World.

Thursday, August 19, 2010

Yellow - What a Color it is !!! Amazing Yellow Color Photos...





உச்சக்கட்ட சோம்பேறிகள் (படங்கள்)





தெருவில் பள்ளம் - 3D அதிசயம்





தங்கத்தாலான சூடான உணவு


தங்கத்தில் நகைகள் செய்து உடலை அலங்கரிக்கலாம், தெரியும் .பஸ்பமாக சில பணக்காரர்கள் அதை சாப்பிடுவதாக கேள்விபட்டிருக்கிறொம் .

இப்போது 24 காரட் தங்கத்தில் சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிடும் ' பழக் கலவை ' ( டெசர்ட் ) தயார் . விலை ரூ. 11.65 லட்சம்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல், கிராண்ட் ஓபுலன்ஸ் சண்டே,

அதில் இப்போது கோடீஸ்வரர்களைக் கவர வித்தியாசமான மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

அதன் பெயர் ப்ரோஜன் ஹாட் சாக்லேட் . இரவு உணவுக்கு பிறகு சாப்பிடும் பழங்கள் கலந்த டெசர்ட் என்ற ஐட்டம் அது .

அதில் சுவிசர்லாந்தில் இருந்து பெறப்படும் 24 காரட் சுத்தமான திரவ தங்கம் ( சமையலில் பயன்படுத்தக்கூடியது ) சேர்க்கப்படுகிறது .

24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறது . ஒரு டெசர்ட் ரூ. 11. 65 லட்சம் . கோடீஸ்வரர்கள் அப்படியே சாப்பிடலாம் .

இந்த டெசர்ட்டை ருசிக்க 2 நாட்களுக்கு முன்பே ஓட்டலுக்கு ஆர்டர் தர வேண்டும் .

Tuesday, August 17, 2010

கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!

அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.

"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.

சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.

உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!

அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.

நன்றி : அம்புலிமாமா

சிரித்த முகம் வேணும்!

"இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"

"ஐந்து வருஷமா இருக்கேங்க!"

"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"

"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"

"என்ன சார் சொல்றாங்க?"

"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"

"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"

"ஆமாங்க!"

"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"

"எது...பிரேக்கா?"

"இல்ல...டிரைவர்!"

நன்றி : தென்கச்சி சுவாமிநாதன்

Monday, August 16, 2010

பலன் தரும் ஸ்லோகம்


(வேண்டுவன எல்லாம் தரும் மகாலட்சுமி துதி)

கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா
நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா காமதேனு:
- தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

பொருள்:

எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே, மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே, நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம்.

வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

(இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொல்லி வரலாம். குறிப்பாக 20.8.10 அன்று வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் முன் நெய் விளக்கேற்றி தாமரைப்பூ சூட்டி இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், வேண்டும் வரத்தை வேண்டியவாறே அருள்வாள் திருமகள்.)

நன்றி : தினகரன்


நம்பிக்கை!!!!!!!!!!!

எப்போதும் ஒரு கதை இடம் பெறு வது வழக்கம். இந்தமுறை இரண்டு கதைகள்...
ஐந்தே வயதாகும் ரேகா, தன்னுடைய பாட்டியின் கிராமத்து வீட்டுக்குப் போயிருந்தாள். இரவு நேரத்தில் அவள் பாட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த போது, திடீரென பலத்த காற்று வீசியது. இடி முழக்கத்துடன் மின்னல் வெட்டியது. பெரும் மழை பிடித்துக் கொண்ட சற்று நேரத்தில் மின்தடை ஏற்பட்டு, எங்கும் இருள் கவ்வியது.
பாட்டி, ரொம்ப இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு!" என்றாள் ரேகா.
பாட்டி உடனே ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டு, ஆகாயத்தில் ஒளிர்ந்த நிலவைக் காட்டினார்.
இதோ... என்றுமே அணையாத இறைவனின் விளக்கு! இந்த நிலா இருக்கும்போது, யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை!" என்றார் பாட்டி.
சந்திரன், கடவுளின் சொந்த விளக்கா?"
ஆமாண்டா செல்லம்! கடவுளுடையதுதான்!"
அவர் இதை அணைச்சுட்டுத் தூங்கப் போயிட்டாருன்னா?"
இல்லடா குட்டி! கடவுள் ஒரு போதும் தூங்க மாட்டார்!"
அப்பாடா! சாமி விழிச்சுக்கிட்டிருக்கும்வரை, எனக்கு பயமில்லை. குட்நைட் பாட்டி!" என்றபடி, படுக்கையில் சாய்ந்து தூங்கிவிட்டாள் ரேகா.

ஹிட்லரின் கடுங்கோபத்துக்கு ஆளான பத்திரிகையாளர் ஒருவர், இருட்டுப்பொந்தில் அடைக்கப்பட்டார். பல நாட்கள் தனிமையிலும், விரக்தியிலும் வாடினார். அவரைப் பார்க்க அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ யாரும் வரவேயில்லை. மனம் நொந்து போயிருந்த அவர், ஒரு கரித்துண்டை எடுத்து யாரும் கவனிப்பதில்லை!" என்று சுவரில் எழுதினார்.
அந்த மண் சுவரின் வெடிப்பின் வழியே, மெல்லிய வெளிச்சம் வந்தது. மறுநாள் ஈரமான வேர் ஒன்று மெள்ள தலை நீட்டியது. இரண்டொரு நாளில் சிறிதாக இலைகள் முளைத்தன. தனக்குத் தரப்பட்ட குவளை நீரின், கொஞ்சத்தை அதன் மீது ஊற்றியதில், ஒரு கொடி படர்ந்தது. அடுத்த வாரம், வெள்ளை நிற சிறு பூ ஒன்று அழகாய் மலர்ந்து மணம் வீசியபோது, அந்தக் கைதி, முன்பு தான் எழுதிய வார்த்தைகளை அழித்து விட்டு, கடவுள் கவனிக்கிறார்!’ என்று எழுதினார்.

கடவுள் இருக்கிறார்... கடவுள் கவனிக்கிறார்... அதனால் நல்லவர்களுக்கு பயமில்லை. நல்லதையே நினைப்பவருக்குத் துயரமில்லை. நல்லவற்றையே நாடும் யாரும் மனம் தளர வேண் டாம்" என்று சொல்லிச் சொல்லி குழந்தைகளை வளருங்கள்.
அமைதி, ஆற்றல், மகிழ்ச்சி ஆகியவை நம் அனைவருக்குள்ளேயே இருக்கின்றன. நாம் விரும் பினால் பயற்சியின் மூலம் இந்த எல்லைக்குள் நுழைந்து இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு பண்டிகைகள், விழாக் காலங்கள், தெய்வ வழிபாடுகள் எல்லாம் பெரிதும் உதவுகின்றன.
‘நாம் இறைவனின் மடியில் இருக்கிறோம். மிகவும் பாதுகாப்பாக’ என்ற நம்பிக்கை உணர்வு நமக்கு இருக்கும்வரை, பயமில்லை... ஜெயம் மட்டுமே!

நன்றி : அனுஷா நடராஜன், மங்கையர்மலர்

ஆஹா அருமையான அன்பு




இனிய சுதந்திர தினம்